உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.65.82 லட்சம்

கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.65.82 லட்சம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகை, வெள்ளி பொருட்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகின்றன.இக்கோவிலில், மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன. செங்கல்பட்டு உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர்கள் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.இதில், 65 லட்சத்து 82 ஆயிரத்து 889 ரூபாயும், 306 கிராம் தங்கம், 2,576 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் வருவாயாக கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி