உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதருக்குள் ஒளிந்த சிறுவர் பூங்கா

புதருக்குள் ஒளிந்த சிறுவர் பூங்கா

மதுராந்தகம், : கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது.இதில், 6 வது வார்டுக்கு உட்பட்ட, விநாயகர் கோவில் குளக்கரை மேல், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு, பேரூராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.தற்போது, பராமரிப்பின்றி பூங்காவின் உள்பகுதி, வெளிப்பகுதி என செடி, கொடிகள் வளர்ந்து, விளையாட முடியாதவாறு, பூங்கா புதருக்குள் உள்ளது.எனவே, பராமரிப்பு இன்றி உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை