உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பீச் வாலிபால் ஜனவரியில் நடக்குது

பீச் வாலிபால் ஜனவரியில் நடக்குது

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை கானத்துாரில், அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, வரும் ஜன., 3 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில், தென் மண்டல அளவில் 104 பல்கலை அணிகள் பங்கேற்கின்றன.அதேபோல், அமெட் பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் மற்றும் பீச் 'ரெஸ்லிங்' போட்டிகள், ஜனவரி 17 - 19ம் தேதிகள் வரை நடக்கின்றன. இப்போட்டிகளில், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.இந்த மாபெரும் விளையாட்டு போட்டிகளில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை