மேலும் செய்திகள்
போதை தடுப்பு விழிப்புணர்வு விண்ணப்பிக்க அழைப்பு
10-May-2025
செங்கல்பட்டு:போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்த, தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;செங்கல்பட்டு மாட்டத்தில், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதை பொருட்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த, அனுபவம் மற்றும் விருப்பம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துகளை செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, நேரிலோ அல்லது தபால் வாயிலாக அனுப்பிவைக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மொபைல் எண்; 6382613182 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10-May-2025