உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் ரயிலில் அடிபட்டு காதல் ஜோடி உயிரிழப்பு

தாம்பரம் ரயிலில் அடிபட்டு காதல் ஜோடி உயிரிழப்பு

பெருங்களத்துார்கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், பஞ்சநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம், 21. சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 22. இருவரும், ஒரே கல்லுாரியில் பி.இ., படித்தபோதிருந்து காதலித்து வந்துள்ளனர்.கடந்த ஆண்டு படிப்பை முடித்த இருவரும், சில மாதங்களுக்கு முன், தாம்பரத்தை அடுத்த பெருங்களத்துாரில், தனித்தனியாக அறை எடுத்து தங்கி, விக்ரம், தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராகவும், ஆதிலட்சுமி, திருமண தகவல் மையத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.இருவரும் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, அரசு பேருந்து வாயிலாக பெருங்களத்துார், இரணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வண்டலுார் ரயில்வே மேம்பாலம் அருகே, பேசிக்கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.அப்போது, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் அடிபட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தாம்பரம் ரயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை