செங்கையில் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நடந்தது.இவ்விழாவில், கலெக்டர் அருண்ராஜ், சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து பத்து ஆசிரியர்களுக்கு நல் ஆசான் விருதுகளை வழங்கினார்.