வளர்ச்சி பணிகள் ஆய்வு
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நெரும்பூர் - இரும்புலிச்சேரி பாலாற்று இடையே நெடுஞ்சாலைத்துறை சார்பில், 46 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. அழகுசமுத்திரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நர்சரி பண்ணை அமைத்து பராமரிக்கப்படுகிறது. வளர்ச்சித்திட்ட பணிகளை, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா நேற்று ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்தார்.