| ADDED : நவ 28, 2025 04:08 AM
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின போட்டிகள் நடக்கின்றன. அதில், சென்னை வருவாய் மாவட்ட அளவில், டென்னிகாய்ட் எனும் வளையப்பந்து போட்டி, கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இரு பாலருக்கும், 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் தனிநபர் மற்றும் இரட்டையர் என, இரு வகைகளில் போட்டிகள் நடத்தப் பட்டன. இரு பிரிவுகளிலும் தலா 23 மண்டல அணிகள் பங்கேற்றன. மாணவருக்கான 14 வயது தனிநபர் பிரிவில், தரம் ஹிந்துஜா பள்ளி முதலிடத்தையும், கேசரி பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித் தன. 17 வயதில் கேசரி பள்ளி மற்றும் தரம் ஹிந்துஜா பள்ளி, முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின. 19 வயதில், கேசரி பள்ளி, பெசன்ட் தியோசோபிக்கல் பள்ளிகள், முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின. இரட்டையரில், 14 வயதில் தரம் ஹிந்துஜா பள்ளி, கேசரி பள்ளி முதல் இரண்டு இடங்களையும்; 17 வயதில் கேசரி பள்ளி, ஆர்.பி.சி., பள்ளிகள் முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றின. அதேபோல், 19 வயதில் கேச ரி பள்ளி முதலிடத்தையும், பெசன்ட் தியோசோபிக்கல் பள்ளி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின. முதலிடத்தை பிடித்த அணிகள், மாநில போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.