உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாநகர பேருந்து மோதி மறைமலை நகரில் மூதாட்டி பலி

 மாநகர பேருந்து மோதி மறைமலை நகரில் மூதாட்டி பலி

மறைமலை நகர்: மறைமலை நகரில், ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மறைமலை நகர் நகராட்சி, பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 80. இவர், நேற்று முற்பகல் 12:15 மணியளவில், மறைமலை நகரில் இருந்து பேரமனுார் நோக்கி நடந்து சென்றார். மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மறைமலை நகரில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற தடம் எண் '118' மாநகர பேருந்து, கன்னியம்மாள் மீது மோதியது. இதில், அவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், கன்னியம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ