புதிதாக ரேஷன் கடை அமைக்க எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே ஆணைக்குன்னம் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை கட்டப்பட்டது. தற்போது, பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ரேஷன் கடையை 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. கட்டடத்தின் சில பகுதிகள் சிறுகச் சிறுக இடிந்து விழுந்து வருகிறது. இதனால், அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே, ரேஷன் கடையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே பகுதியில், புதிதாக கட்டடம் கட்டித் தரக்கோரி, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.