உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் கிளை நுாலகத்தை, தரம் உயர்த்த வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்போரூர் கிளை நுாலகம், 1959ல் துவக்கப்பட்டது. இதில், 2, 500 உறுப்பினர்கள் உள்ளனர். 35,000 புத்தகங்கள் உள்ளன. காலை 9:00 மணி முதல் மதியம் 12: 30 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும், இந்த நுாலகம் இயங்கி வருகிறது. மாணவர்கள், பொதுமக்கள் என, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து படிக்கின்றனர். கடந்த 2012ம் ஆண்டு, திருப்போரூர் தாலுகாவாக மாற்றப்பட்டு, தற்போது 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த நுாலகம் இன்னும் கிளை நுாலகமாகவே செயல்பட்டு வருகிறது. திருப்போரூர் கிளை நுாலகத்தை, தரம் உயர்த்த வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி