உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 31ம் தேதி விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

31ம் தேதி விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு: அக். 28-: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. வேளாண் துறை உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கையை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !