மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 56 பேருக்கு பட்டா
11-Sep-2024
செங்கல்பட்டு, - செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், கலைஞரின் கனவு இல்ல வீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 334 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.அதன்பின், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 13 பயனாளிகளுக்கு சிறு, குறு தொழில் துவங்குவதற்கு வங்கிக்கடனுக்கு மானியமாக 2.66 லட்சம் ரூபாய் மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தில் பணிபுரிய மூன்று பேருக்கு பணி நியமன ஆணையை, கலெக்டர் வழங்கினார்.
11-Sep-2024