உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது கீழக்கண்டை கிராமத்தினர் அச்சம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது கீழக்கண்டை கிராமத்தினர் அச்சம்

பவுஞ்சூர், கீழக்கண்டை கிராமத்தில், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் விபத்து அபாயம் நீடிப்பதால், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.பவுஞ்சூர் அருகே கீழக்கண்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நியாய விலைக்கடை உள்ளது. இதன் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளதால், பலத்த காற்று வீசினால், தொட்டி இடிந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது.எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக, பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி