உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் - ஸ்கூட்டர் மோதல் சட்ட கல்லுாரி மாணவி பலி

பஸ் - ஸ்கூட்டர் மோதல் சட்ட கல்லுாரி மாணவி பலி

திருக்கழுக்குன்றம், - திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்துாரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷாந்தி, 23. பல்லாவரம், தனியார் கல்லுாரியில், எல்.எல்.பி., சட்டப் படிப்பு முதலாமாண்டு பயின்றார்.இவர், முள்ளிகொளத்துாரில் இருந்து செங்கல்பட்டிற்கு, தினமும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் செல்வார். செங்கல்பட்டு ரயில் நிலைய நிறுத்துமிடத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ரயிலில் பல்லாவரம் சென்று திரும்புவார்.கல்லுாரி செல்வதற்காக, நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், செங்கல்பட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றம், ஒரகடம் சாலை சந்திப்பு வளைவு பகுதியில், காலை 6:00 மணிக்கு கடந்தபோது, கல்பாக்கம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, ஸ்கூட்டரில் மோதியது.இதில் படுகாயமடைந்த நிஷாந்தியை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு நிஷாந்தியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது தந்தை, திருக்கழுக்குன்றம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை