திருப்போரூரில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ரெடி
திருப்போரூர்,:திருப்போரூரில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது. இதன் கட்டுப்பாட்டில், திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர் உள்ளிட்ட 17 கிராமங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடம், நாளடைவில் பலமிழந்து சுவர் விரிசலடைந்து காணப்படுகிறது.ஆய்வாளர் உள்ளிட்டோர் அபாயத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது மழைநீர் கட்டடத்திற்குள் புகுந்து, பதிவேடுகள் மற்றும் அலுவலக கணினி உள்ளிட்டவற்றை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, புதிய அலுவலக குடியிருப்பு கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியினாது. இதையடுத்து, திருப்போரூர் தாலுகா அலுவலகம் எதிரே, 26.83 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம் கட்ட பணி துவங்கியது. கட்டுமான பணிகள் தற்போது முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.