உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துாரில் வரும் 26ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மேல்மருவத்துாரில் வரும் 26ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : மேல்மருவத்துார் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 26ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து, மேல்மருவத்துார் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அமைச்சர் அன்பரசன் தலைமையில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 26ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.இம்முகாமில், 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், வேலையளிப்பவர், வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில், பதிவு செய்து கொள்ளலாம். இதில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வி தகுதி உடைய வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்தினாளி வேலை நாடுநர்களும் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.வயது வரம்பு, 18 வயது முதல் 40 வயது வரை. தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2742 6020 - 63834 60933, -80567 89359 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை