மேலும் செய்திகள்
ரேஷன் கடைகளில் குடிநீர் வைக்க கோரிக்கை
20-Apr-2025
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாமில் 207 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம், நேற்று, நடந்தது. இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட 207 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, அந்தந்த தாலுகாவில், வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசீலினை செய்து, தீர்வு கண்டனர் என, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் தெரிவித்தார்.
20-Apr-2025