உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்வாயில் ஆண் சடலம்

கால்வாயில் ஆண் சடலம்

குன்றத்துார்:தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த ஆதனுாரைச் சேர்ந்தவர்கலையரசன், 25; கார் ஓட்டுனர். போதை பழக்கத்திற்கு அடிமை யான இவர், இருதினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்; பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் கலையரசனை தேடி வந்தனர்.இந்நிலையில், ஆதனுாரில் உள்ள கால்வாயில் அவரது உடல் மிதந்தது. மணிமங்கலம் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு உடலை மீட்டனர். போதையில் கால்வாயில் தவறி விழுந்து, கலையரசன் இறந்ததாக போலீசார்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்