உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை

ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டம் பகுதியில், பாலாற்று நடுவே திம்மாவரம் பழத்தோட்டம் -- ஒரக்காட்பேட்டை செல்லும் மேம்பாலம், 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இந்த மேம்பாலம் வழியாக, ஒரக்காட்பேட்டை, மாம்பாக்கம், சாலவாக்கம், காவாந்தண்டலம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கிராம மக்கள், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்கு சென்று வர முக்கிய சாலையாக உள்ளது.இந்த மேம்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த மேம்பாலம் வழியாக, தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், மண் லாரிகள் மற்றும் விவசாய இடுபொருள் வாங்க செங்கல்பட்டு செல்வோர் மற்றும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் செங்கல்பட்டு மார்க்கெட்டிற்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததாலும், சாலை வளைவில் வேகத்தடை இல்லாததாலும், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.சில மாதங்களிலேயே பத்துக்கும் மேற்பட்டோர் விபத்துகளில், இப்பகுதியினர் சிக்கியுள்ளனர். கடந்த வாரம் நடந்த விபத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன.இந்த பகுதி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ளதால், இரண்டு மாவட்ட மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ