உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

 அஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் ஊராட்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் வெளி ஊர்களுக்கு சென்று வர 1 கி.மீ., நடந்து சென்று சிங்கப்பெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலையில் தென்மேல்பாக்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வருகின்றனர். பின் அங்கிருந்து சிங்கப்பெருமாள் கோவில், தாம்பரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதே போல கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம் பகுதி பள்ளி மாணவ -- மாணவியர் அஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த பேருந்து நிறுத்தம் வந்து செல்கின்றனர். பேருந்து நிறுத்ததில் நிழற்குடை இல்லாமல், வெயில் காலங்களில் மரநிழல்களிலும், மழை காலங்களில் நனைந்த படியும் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி