உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான மழைநீர் வடிகால் சீரமைக்க கோரிக்கை

சேதமான மழைநீர் வடிகால் சீரமைக்க கோரிக்கை

வண்டலுார்:வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில் மோசமான நிலையில் உள்ள வடிகால்களை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான, 29 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரித்து வருகிறது. இந்த சாலையில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வடிகால் அனைத்தும், துார்ந்த நிலையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. பருவ மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வடிகால்களை துார்வாரி, மழை நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை