உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, சமுதாயக்கூடம் அருகே உள்ள அஞ்சூரம்மன் கோவில் குளம் முழுதும் ஆகாயத் தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஓரம் கோவில் குளம் அமைந்துள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். குளத்திற்கு நீர் வரும் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும்.குளத்தின் உள் பகுதியில் உள்ள கழிவுகளை அகற்ற, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ