உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்

பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்

சென்னை:கிழக்கு தாம்பரத்தில், பீரோவில் இருந்த 3 லட்சம் ரூபாய் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கிழக்கு தாம்பரம், அண்ணாதுரை தெருவைச் சேர்ந்தவர் விமலா, 40; வீட்டு வேலை செய்து வருகிறார். நவ., 4ம் தேதி, வீட்டு பீரோவில், 3 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். நேற்று காலை, பீரோவை திறந்து பார்த்த போது, உள்ளே வைத்திருந்த பணம் மாயமானதை கண்டு, விமலா அதிர்ச்சியடைந்தார். பீரோ முழுதும் தேடியும் கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து, சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை