உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு

 பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு

மாமல்லபுரம், நவ. 27- கடலில் மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேங்கடரத்தினம், திருப்போரூர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது மகன் பிரமையன், 16, அப்பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நேற்று முன்தினம், உடன் பயிலும் நண்பர்களுடன், மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு பகுதி கடலில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாயமானார். மாமல்லபுரம் போலீசார், அவரை தேடிய நிலையில், நேற்று மாலை 5:35 மணிக்கு, கொக்கிலமேடு கடற் கரையில், உடல் கரை ஒதுங்கியது. போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை