உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓட்டேரி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

ஓட்டேரி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

வண்டலுார்,வண்டலுார், ஓட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று, ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ - மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 775 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ