உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பள்ளி நேரத்தில் கல்குவாரியில் வெடி மாணவ ---மாணவியர் அதிர்ச்சி

 பள்ளி நேரத்தில் கல்குவாரியில் வெடி மாணவ ---மாணவியர் அதிர்ச்சி

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியின் பின்புறத்தில் 400 மீட்டர் தொலைவில், தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் பள்ளி செயல்படும் போது கல்குவாரியில் பாறைகளை தகர்க்க, வெடி வைக்கப்படுவதால், ஏற்படும் அதிர்ச்சி மற்றும் சத்தத்தால் பள்ளி மாணவ-- மாணவியர் அதிர்ச்சியடைகின்றனர். இதனால் இருதய பிரச்னை உள்ள குழந்தைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவர்கள் கவன சிதறல் ஏற்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி நேரத்தில் கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை