உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது.மாமல்லபுரம், ஏமாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில், பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், திருமண தடை மற்றும் ராகு - கேது தோஷம் ஆகிய பரிகார கோவிலாக விளங்குகிறது.இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.இந்த உற்சவம், நேற்று முன்தினம் காலை வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வரும் 22ம் தேதி வரை நடைபெறும் உத்சவத்தில், தினசரி காலை திருமஞ்சனம், நண்பகல் மற்றும் இரவு உற்சவம் நடந்து, சுவாமி வீதியுலா செல்கிறார். முக்கிய உத்சவங்களாக, வரும் 17ம் தேதி இரவு கருட சேவை, 19ம் தேதி காலை, திருத்தேரில் சுவாமி உலா, 22ம் தேதி இரவு தெப்போற்சவம் ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி