திருவடிசூலத்தில் ஞானபுரீஸ்வரருக்கு திருக்கல்யாணம்
மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருவடிசூலம் கிராமத்தில், கோவர்தனாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வர் கோவில் உள்ளது.நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.மாலை 5:00மணிக்கு கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் சன்னிதியில் இருந்து சீர்வரிசை தட்டுகளுடன் பெண் அழைப்பு நடைபெற்றது.தொடர்ந்து, மணப்பந்தலில் கோவர்தனாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரருக்கு புஷ்ப அலங்காரத்துடன் யாகம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் மற்றும் மங்கல இசை முழங்க, வாணவேடிக்கையுடன் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று, தீபாராதனை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.