உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு பஜாரில் வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

சூணாம்பேடு பஜாரில் வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சியில் பஜார் பகுதியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 18 கடைகள் இருந்தன.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பராமரிப்பு இன்றி பழுதடைந்து இருந்தது, மேலும் கடைகள் சாலை ஓரத்தில் இருப்பதால் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதையடுத்து பழைய கடைகளை அகற்றி விட்டு புதிய கடைகள் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடைகள் காலி செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 11ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.தரை தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் கூடிய, புதிய வணிக வளாக கட்டம் அமைப்பதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்ட நிலையில் ,தற்போது வரை புதிய வணிக வளாக கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது.இதனால் பழைய 18 கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள், புதிய கடைகள் வாடகைக்கு கிடைக்காமலும், தனிநபர்களிடம் அதிக வாடகை செலுத்தியும் கடைகள் நடத்தி வருகின்றனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், சூணாம்பேடு பஜார் பகுதியில் ஊராட்சி சார்பாக புதிய வணிக வளாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ