உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருவடிசூலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

 திருவடிசூலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மறைமலை நகர்: செங்கல்பட்டு அருகில் குண்டும் குழியுமாக உள்ள திருவடிசூலம் சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருவடிசூலம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பழமையான ஞானபுரீஸ்வரர் சமேத கோவர்தனாம்பிகை கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிரதான சிமென்ட் சாலை கடந்த சில மாதங்களாக பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால்இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருவடிசூலம் செல்லும் பிரதான சாலையில் 200 மீட்டர் துாரம் சாலை பெயர்ந்து ஜல்லி கற்கள் பரவலாகி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ