உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் கம்பத்தை சூழ்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

மின் கம்பத்தை சூழ்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

தி ருப்போரூர் - செங்கல்பட்டு சாலையை ஒட்டியுள்ள பூயிலுப்பை கிராம ஏரிப்பகுதியில், மின்தடம் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில், அதிக அளவில் கொடிகள் வளர்ந்து பின்னி உள்ளன. மின் கம்பம் இருப்பதே தெரியாத அளவில், கொடிகள் சூழ்ந்து உள்ளன. பச்சை செடிகளாக இருப்பதால், மின்சாரம் பாய்ந்து, அருகில் செல்வோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்வாரிய துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.விஜயகாந்த், பூயிலுப்பை கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ