மேலும் செய்திகள்
மின்கம்பம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
04-Sep-2025
தி ருப்போரூர் - செங்கல்பட்டு சாலையை ஒட்டியுள்ள பூயிலுப்பை கிராம ஏரிப்பகுதியில், மின்தடம் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில், அதிக அளவில் கொடிகள் வளர்ந்து பின்னி உள்ளன. மின் கம்பம் இருப்பதே தெரியாத அளவில், கொடிகள் சூழ்ந்து உள்ளன. பச்சை செடிகளாக இருப்பதால், மின்சாரம் பாய்ந்து, அருகில் செல்வோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்வாரிய துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.விஜயகாந்த், பூயிலுப்பை கிராமம்.
04-Sep-2025