உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 விமானங்கள் சென்னையில் ரத்து

3 விமானங்கள் சென்னையில் ரத்து

சென்னை,சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகை என மூன்று விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.லண்டனில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12:45 மணிக்கு புறப்பட்டு காலை 3:30 மணிக்கு சென்னை வரும் பிரிடிஷ் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதே போல், சென்னையில் இருந்து காலை 8:05 மணிக்கு டில்லி புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம், சீரடிக்கு மதியம் 2:40மணிக்கு புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் என, இரு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் நிர்வாக காரணங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி