உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 சவரன் செயின் மூதாட்டியிடம் அபேஸ்

3 சவரன் செயின் மூதாட்டியிடம் அபேஸ்

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நியு காலனி 16வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி, 63. இவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது, அங்கிருந்த, 40 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், மருத்துவ காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கூறினார்.அதற்கு நகை அணிந்திருக்கக்கூடாது எனக்கூறியதால் மூதாட்டி 3 சவரன் செயினை கழற்றி கையில் வைத்திருந்தார். பின், ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்குவதுபோல் நகையுடன் அந்த நபர் மாயமானார். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ