உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வகுப்பறை கூரை இடிந்து 3 மாணவியர் காயம்

வகுப்பறை கூரை இடிந்து 3 மாணவியர் காயம்

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில் துவக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இதில், 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியின் ஒரு பகுதியில் கட்டடம் சேதமடைந்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டடங்களில் வகுப்புகள் நடக்கின்றன.இந்நிலையில், நேற்று 10ம் வகுப்பறையில், நண்பகல் 1:30 மணிக்கு திடீரென கூரை இடிந்து விழுந்தது. இதில், வகுப்பறையில் இருந்த மூன்று மாணவியருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். கூரை இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடத்திலிருந்து, அனைத்து மாணவ - மாணவியரும் வெளியேற்றப்பட்டு, வெளிப்புறத்தில் அமரவைக்கப்பட்டனர். கல்வி அதிகாரிகள், போலீசார் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியில் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்