உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகாலில் கழிவுநீர் மதுரவாயலில் தொடருது அத்துமீறல்

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் மதுரவாயலில் தொடருது அத்துமீறல்

மதுரவாயல், மதுரவாயலில், மழைநீர் வடிகாலில் சட்ட விரோதமாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வடிகால் வாயிலாக மதுரவாயல் மேம்பாலம் அருகே, கூவம் ஆற்றில் கலக்கிறது.அதேபோல், வானகரம் ஊராட்சியில் இருந்து வெளியேறும் மழைநீர், வானகரம் பிரதான சாலையிலுள்ள மழைநீர் வடிகால் வழியாகச் சென்று, கூவத்தில் கலக்கிறது.மழைநீர் செல்ல வேண்டிய இந்த வடிகாலில், சட்ட விரோதமாக கழிவுநீர் விடப்படுகிறது. இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாகச் சென்று, கூவம் ஆற்றில் கலக்கிறது.இந்த கழிவுநீர் ரசாயனம் கலந்தது போல், சாம்பல் நிறத்தில் உள்ளது. மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதும், தொழிற்சாலை கழிவுகள் விடப்படுவதும் இதனால் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.எனவே, கூவம் ஆற்றில் மழைநீர் வெளியேற இணைக்கப்பட்டுள்ள வடிகாலில், கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வானகரம் ஊராட்சியில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த வடிகால் வழியாக வெளியேறும்.ஊராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில், கழிவுநீர் இணைப்புகள் இருக்கலாம். இதனால் தான், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை