உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர் -- நாகர்கோவில் வந்தே பாரத் அனைத்து நாட்களும் நீட்டிக்கப்படுமா?

எழும்பூர் -- நாகர்கோவில் வந்தே பாரத் அனைத்து நாட்களும் நீட்டிக்கப்படுமா?

சென்னை எழும்பூர் - - நாகர்கோவில் இடையே 'வந்தே பாரத்' ரயில்கள், கடந்த ஜனவரி முதல் சிறப்பு சேவையாக இயக்கப்பட்டு வருகின்றன.முதலில் வாரத்தில் ஒருநாளும், சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், வாரத்தில் மூன்று நாட்களுக்கு நீட்டித்து இயக்கப்பட்டன.தற்போது, சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு, வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, விருதுநகரில் நிறுத்துவதற்கு பதிலாக, கோவில்பட்டிக்கு நிறுத்தம் மாற்றப்பட்டது.அந்த வகையில், கோவில்பட்டியில் நின்று செல்லும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இது தான். இதன் வாயிலாக, துாத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரமான கோவில்பட்டி வியாபாரிகளும், அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.இந்த நடவடிக்கை ரயிலுக்கு மேலும் வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAM
ஜூலை 18, 2024 13:13

Vande Bharat train connecting spiritual cities from Tiruvannamalai will be beneficial for spiritual devotees. Long time dream of devotees will be fulfilled. Thanks.


RAM
ஜூலை 18, 2024 13:09

திருவண்ணாமலையில் இருந்து ஆன்மீக நகரங்களை இணைத்து வந்தே பாரத் ரயில் இயக்கினால் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்மீக பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்றி.


KB TRADERS Agro foods (T. Vinayagamoorthy)
ஜூலை 17, 2024 13:55

இந்த ரயிலில் கூட்டம் எல்லா நாட்களும் நிரம்பி வழிறகிறது என்றால் எதிர் திசையில் இருந்தும் இதே நேரத்தில் ஒரு ரயில் இயக்க வேண்டும் தண்டவாளம் டிரைவர் இல்லை என சாக்கு போக்கு சொல்லாமல் கூடுதல் பகல் நேர ரயில்கள் இயக்க. வேண்டும். மேலும் சென்னை எழும்பூரில் இருந்து திருத்துரைபூண்டி பட்டுகோட்டை வழியாக கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக விருத்தாசலம் அரியலூர் வழியாக. முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட பகல் நேர ரயில் தென் மாவட்டங்களுக்கு இயக்கினால் பெரும் உதவியாக இருக்கும் ஐயா .


Er.M.SRINIVASAN.M.E
ஜூலை 17, 2024 11:14

இந்த இரயில் சேவை நிரந்தரமாக்க வேண்டும். மக்கள் 120 நாட்களுக்கு முன் புக்கிங் செய்து பயன்பெறலாம். மேலும் திருநல்வேலி சென்னை எக்மோர் வந்தே பாரத் கோவில்பட்டி நிறுத்தம் வழங்க வேண்டும். கோவில்பட்டி புறப்படும் நேரம் காலை 6.40. எக்மோர் சென்றடையும் நேரம் மதியம் 1.30. எக்மோர் பிறப்படும் நேரம் மதியம் 2.50 மணி. கோவில்பட்டி வந்து சேறும் நேரம் இரவு 9.40. கோவில்பட்டி இரயில் நிலையம் அருகில் தூத்துக்குடி சிட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளுக்கு நேரடி பேருந்து/கார்களில் சென்று வீடுகளுக்கு எளிதில் செல்லலாம். காலை 6.40 க்குள் இந்த ஊர்களில் இருந்து கோவில்பட்டி நிலையத்திற்கு எளிதில் வரலாம். தென்காசி கிழக்கு பகுதி இலையரசநேன்தல் திருவேங்கடம், களிங்கபட்டி , விருதுநகர் சாத்தூர் உப்பத்துர் , நள்ளி டால்மியா பாரத், ஏழயிரம்பண்ணை பகுதியை சார்ந்த மக்கள் எளிதில் கோவில்பட்டி நிலையத்திற்கு வந்து பயனடையலாம்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ