உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து 4 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 4 சவரன் நகை திருட்டு

குன்றத்துார், குன்றத்துார், பகவதி நகரைச் சேர்ந்தவர் பாபு, 35; தனியார் ஊழியர். இவர் மனைவி சித்ரா, 33.நேற்று முன்தினம் காலை, பாபு வேலைக்கு புறப்பட்டார். சித்ரா, தன் இரு பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டு, தாய் வீட்டுக்கு சென்றார்.மாலையில், சித்ரா வீடு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி, 25,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்த அவரது புகாரின்படி, குன்றத்துார் போலீசார், தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை