உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேன் டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி; 18 பேர் காயம்

வேன் டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி; 18 பேர் காயம்

திருப்போரூர், கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பம் பகுதியைச்சேர்ந்தோர், குன்றத்துாரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு, வேனில் 20 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது, திருப்போரூர்- ஆலத்துார் ஆறுவழிச்சாலையில் வேன் சென்றபோது, தண்டலம் அருகே, இரவு 10:00 மணிக்கு, திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.அதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், 52, என்பவர், வேன் அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், வேனில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர்.அவ்வழியே சென்றோர், அவர்களை மீட்டு, மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாயிலாக, திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி