உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.சி.ஆர்., வழியாக வெளியூருக்கு கூடுதலாக 100 பஸ்கள் இயக்கம்

இ.சி.ஆர்., வழியாக வெளியூருக்கு கூடுதலாக 100 பஸ்கள் இயக்கம்

சென்னை:சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் வரை, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்புக்கு பின், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பயணியரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து, பயணியரின் தேவைக்கு ஏற்ப, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:கோயம்பேடில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறையொட்டி, பயணியரின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம்.ஓட்டுனர், நடத்துனர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, பயணியரின் தேவைக்கு ஏற்ப, 100 பேருந்துகள் வரை தினமும் அதிகரித்து இயக்கி வருகிறோம். பயணியர் கூட்டம் அதிகரிக்கும்போது, மேலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி