உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரக்கோணம் தடத்தில் பணி 3 புறநகர் ரயில் சேவை ரத்து

அரக்கோணம் தடத்தில் பணி 3 புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை:அரக்கோணம் தடத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், மூன்று ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:★ திருத்தணி - அரக்கோணம் நள்ளிரவு 11:10 மணி ரயில், வரும் 11, 13ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது★ அரக்கோணம் - திருத்தணி அதிகாலை 4:00 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது★ அரக்கோணம் - திருத்தணி அதிகாலை 5:00 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

ஒரு பகுதி ரத்து

★ சென்ட்ரல் - திருத்தணி இரவு 8:10 மணி ரயில், வரும் 11, 13ம் தேதிகளில் இரவு 8:10 மணி ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்★ திருத்தணி - சென்ட்ரல் அதிகாலை 4:30 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்★ திருத்தணி - சென்ட்ரல் அதிகாலை 5:30 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை