உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகன் கொலையில் ஜாமின் பெற்று தாயையும் கொல்ல வந்த ரவுடிகள்

மகன் கொலையில் ஜாமின் பெற்று தாயையும் கொல்ல வந்த ரவுடிகள்

கண்ணகி நகர், கண்ணகி நகரில் அலெக்ஸ், 46, என்பவர், பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் சென்ற இருவர், அலெக்சிடம் பணம் கேட்டு மிரட்டினர். தர மறுத்ததால், அவரை தாக்கி, 1,000 ரூபாய் பறித்துச் சென்றனர்.கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அருண், 26, நவீன்ராஜ், 19, என்பது தெரிந்தது.திருவான்மியூரில் துாய்மை பணியாளர் டில்லிபாபுவை, கடந்த பிப்., மாதம் கொலை செய்து சிறை சென்ற இருவரும், 25 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்தது தெரிந்தது.மேலும், இவர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. டில்லிபாபுவின் தாயையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. கையில் பணம் இல்லாததால், அலெக்சை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.இருவரையும், போலீசார் கைது செய்தனர். அப்போது, தப்பி செல்ல முயன்றபோது, இருவரும் தடுக்கி விழுந்து காயமடைந்தனர்.அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மாவு கட்டுப்போட்டு சிகிச்சை அளித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !