உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூவீலர் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

டூவீலர் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி, கிருஷ்ணப்பா முதலி தெருவைச் சேர்ந்தவர் பழனிவேலு, 56. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் முன் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. புகார்படி வழக்கு பதிவு செய்த அண்ணாசாலை போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணாசாலை பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 19 மற்றும் 14 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து, சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும், கார்திகேயனை புழல் சிறையிலும் அடைத்தனர். திருடப்பட்ட வாகனத்தை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை