உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் 10 சவரன் திருட்டு

வீட்டில் 10 சவரன் திருட்டு

திருமுல்லைவாயல், திருமுல்லைவாயல், தென்றல் நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி, 45. இவர், அம்பத்துாரில் 'சார்மினார்' பந்தக்கால் கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி திருச்செந்துாருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதியின் உறவினர் காமராஜ், அங்கு சென்று பார்த்தபோது, பீரோ கதவை உடைத்து, 10 சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது.இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி