உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் கூடுதலாக 103 தாழ்தள பேருந்துகள்

சென்னையில் கூடுதலாக 103 தாழ்தள பேருந்துகள்

சென்னை:'சென்னையில் கூடுதலாக, 103 தாழ்தள பேருந்துகள் இணைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளன' என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.சென்னையில், குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், ஆறு ஆண்டுகளுக்கு முன், தாழ்தள பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.முதல்கட்டமாக 58 பேருந்துகள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்தன.இந்த வகை பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி உட்பட, பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக இந்த பேருந்துகள் இணைக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, கடந்த சில வாரத்தில் மட்டும், மேலும் 103 தாழ்தள பேருந்துகள் இணைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனால், மாநகர போக்குவரத்து கழகத்தில், தாழ்தள பேருந்துகளின் எண்ணிக்கை 331 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சியுள்ள தாழ்தள பேருந்துகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இணைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை