உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 டி.எம்.சி., நீர் எட்டியது செம்பரம்பாக்கம்

2 டி.எம்.சி., நீர் எட்டியது செம்பரம்பாக்கம்

குன்றத்துார்,சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில், அவ்வப்போது பெய்யும் கனமழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வந்தது.கடந்த வாரம், 1.37 டி.எம்.சி., கொள்ளளவு இருந்தது. நேற்று ஏரியின் கொள்ளளவு, 2 டி.எம்.சியை எட்டியது. நீர் மட்டம் ஆழம், 17.41 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு, 400 கன அடியாகவும் வெளியேற்றம் 134 கன அடியாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி