3 அலங்காரத்தில் பவள வண்ண பெருமாள்
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், உற்சவர் ஸ்ரீ தேவி - பூதேவி சமேத பவள வண்ண பெருமாள், ராம - கிருஷ்ண - வெங்கடேசன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கையில் வில், வாயில் புல்லாங்குழல், சங்கு சங்கரத்துடன் மூன்று அலங்காரத்தையும் ஒரே நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.