உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம், நேதாஜி நகர் பகுதியில், ஒருவர் தனி வீடு வாடகைக்கு எடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பதாக, பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார், வீட்டு உரிமையாளரின் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின், போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி விற்ற, ரஹமத்துல்லாஹ், 45, மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை