மேலும் செய்திகள்
குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
10-Apr-2025
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.இதில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த, மூன்று உதவி கமிஷனர்கள், மூன்று ஆய்வாளர்கள் உட்பட, 58 பேரிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து கமிஷனர் அருண், மனுக்களை பெற்றார்.கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன. அவற்றுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.இம்முகாமில் கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
10-Apr-2025