உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 27. இவர், கொலை முயற்சி வழக்கில் கடலாடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அதேநேரம், வெளிநாட்டில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் 2:50 மணிக்கு ஒமன் தலைநகர் மஸ்கட்டில் சென்னை வந்த விமானத்தில், மாரிமுத்து வந்தார். ஆவணங்களை சரிபார்த்த குடியுரிமை அதிகாரிகள், அவர் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் மாரிமுத்து ஒப்படைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை